Wednesday, October 20, 2010

ஆணைக்குழுவை நிராகரித்த சர்வதேச மனித உரிமைக் குழுக்களை லண்டனில் கடுமையாகச் சாடினார் பீரிஸ்

இலங்கையின் யுத்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான
ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதை மனித
உரிமைகளுக்கான சர்வதேசக் குழுக்கள் நிராகரித்ததை காலனித்துவத் தன்மை வாய்ந்தது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சாடியுள்ளார்.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகமும், லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையும், பிரசெல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழுவும் இலங்கையின் குழுவை விமர்சித்திருந்ததுடன், சாட்சியமளிக்க முன்வருமாறு அக்குழு விடுத்திருந்த அழைப்பையும் நிராகரித்திருந்தது.

லண்டனைத் தளமாகக் கொண்ட முன்னணி புத்திஜீவிகள் நிறுவனமான தந்திரோபாய கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமைச்சர் பீரிஸ்,உரிமைகளுக்கான குழுக்கள் கவனத்தை ஈர்க்காத தன்மையை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். இது அநேகமாக காலனித்துவத் தன்மை வாய்ந்த போக்காகும்.
போஷித்தல்,சாதகமாக்குதல் என்பன காலனித்துவத் தன்மை வாய்ந்தவையாகும். இலங்கையர்கள் தமது சொந்த எதிர்காலத்தை வகுத்துக்கொள்ள இயலாதவாறு ஏனையோர் தலையிடுவதான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது கடந்த ஆகஸ்ட் முதல் அமர்வுகளை நடத்தி வருகிறது. முன்னாள் யுத்த வலயங்களைச் சேர்ந்த தமிழர்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்திருப்பதாக அக்குழு தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் இடம்பெறும் அமர்வுகளுக்கு சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

லண்டனில் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவானது தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள ஆணைக்குழுக்களை ஒத்ததொன்று என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Copyright © எதிர்வு